Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லண்டனில் சொகுசாக வாழும் நிரவ் மோடி

மார்ச் 09, 2019 05:50

லண்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்வது தெரிய வந்துள்ளது. 
வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 48 வயதாகும் நிரவ் மோடியை கைது செய்து இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நிரவ் மோடி லண்டனில் இருப்பதற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளது.  

லண்டன் டெய்லி டெலிகிராப் என்ற செய்தி நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான நிரவ் மோடி 8 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.62.5 கோடி) மதிப்பிலான சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பங்களாவின் மாத வாடகை 17,000 யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 லட்சம்) என கூறப்படுகிறது. 

லண்டனில் ஆக்ஸ்போர்ட் தெரு அருகே உள்ள சொகுசு பங்களாவில் நிரவ் மோடி வாழ்ந்து வருவதாகவும், சோகோவில் புதிய வைர வியாபாரம் ஒன்றை துவங்கி உள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிரவ் மோடி, சர்வ சாதாரணமாக தனது சிறிய நாயை கூட்டிக் கொண்டு , தனது சொகுசு பங்களாவில் இருந்து அருகில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு வாக்கிங் சென்று வருகிறார். தான் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக நிரவ் மோடி லண்டனில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு இருப்பதாக இந்தியாவும், பிற நாடுகளின் உளவுத்துறை தகவல்களும் கூறி வரும் நிலையில், சற்று குண்டான தோற்றத்துடன், மீசை வைத்துக் கொண்டு லண்டனில் நிரவ் மோடி வலம் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்